ஒரு கணமே வீசிய தென்றலில்
அசைவுற்ற குறுமணியின்
ஒற்றையோசை
இலேசாகத் தொனித்த தருணத்தில்
என்முன்னே தோன்றத்தான் போகிறாய்
ஒரு நொடிப்பொழுதே பரவிய
சுகந்தத்தின் ஓரிழை
சுவாசித்த நிமிடத்தில்
நம் கண்கள் சந்திக்கத்தான் போகின்றன
ஒரு மீட்டலிலே
அறுந்த தந்தியின்
அநாதம்
அதிர்ந்த பொழுதில்
உன் பார்வையை விலக்கத்தான் போகிறாய்
காதலர் தினத்தில் ஏதும் புதிதில்லை
சினேகமாக ஒரு பார்வை
உதிர்த்துவிட்டுப் போ
மலர்களின் இதழ்களை
தேவதைகள்் பிய்க்கமாட்டார்கள்
என்று கேள்வியுற்றிருக்கிறேன்.
1 comment:
அருமையான கவிதை....
Post a Comment